காஞ்சிபுரத்தை சேர்ந்த ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். இவர் சூர்யாவின் தீவிர ரசிகையான லாவண்யா என்பவரை கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே நேற்று திருமண மண்டபத்தில் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது திடீரென கணேஷின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அது மட்டுமல்லாமல் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும் எனவும் சூர்யா அறிவுரை வழங்கினார். தான் ஒரு மாத காலம் வெளியூரில் இருப்பதால் போனில் வாழ்த்து கூறியதாகவும் பின்னர் வந்து நேரில் சந்திப்பதாகவும் கூறி மணமக்களை வாழ்த்தினார்.
காஞ்சிபுரம்: ரசிகரின் திருமணத்திற்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாhttps://t.co/wupaoCQKa2 | #Suriya #kanchipuram @Suriya_offl pic.twitter.com/QzeI2jwxlp
— ABP Nadu (@abpnadu) September 3, 2022
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென சூர்யா வாழ்த்துக் கூறியதால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினர்.மேலும் தீவிர ரசிகரின் திருமணத்திற்கு சூர்யா வாழ்ந்து தெரிவித்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.