விபரீத முடிவு எடுத்த நடிகை ஜெசி பவுலின்…. இறப்பதற்கு முன்பு வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…. ரசிகர்கள் கவலை…..!!!!

சென்னையில் காதல் தோல்வியால் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ என்ற பகுதியில் வசித்து வரும் ஜெஸி  பவுலின் தீபா என்பவர் சினிமா துணை நடிகையாக உள்ளார். 29 வயதாகும் இவர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் மற்றும் வாய்தா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே தீபா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, மனசுல நிறைய கவலை இருக்கு, யாரிடமாவது மனசு விட்டு பேசணும்னு எனக்கு தோணுது, ஆனால் கேட்பதற்கு தான் யாருமே இல்ல என்ற பட வசனத்தை அவர் பேசியுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Powlenjessica Amaranathan💫 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@powlenjessica_offl)

ஒருவேளை அவர் மனதில் இருக்கும் கவலைகளை யாரிடமாவது சொல்ல முடியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா என்று ரசிகர்கள் பலரும் குழம்பியுள்ளனர்.அதேசமயம் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தீபா எழுதிய கடிதம் சிக்கி இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் தீபா ஏன் இந்த தற்கொலை முடிவு எடுத்தார் என்பது போலீஸ் நடத்தும் விசாரணையில் தான் தெரிய வரும்.