அவன நேர்ல பார்த்தா கன்னத்துல பளார்னு அறைஞ்சிடுவேன்…. செம கடுப்பான வனிதா…. அது யார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார்.

அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து youtube சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார். தற்போது அனல் காற்று, அந்தக் கண் மற்றும் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வனிதா கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மேக்கப் செய்வதிலும் வனிதா ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

இதனிடையே அவ்வபோது பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் வனிதா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது மகன் ஸ்ரீஹரி பற்றி பேசியுள்ளார். வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவரின் மகன் மனிதாவிடம் இல்லாமல் சிறு வயது முதலே தனது தாத்தா விஜயகுமாரிடம் வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகன் குறித்து பேசிய வனிதா, அவன் ஆள் தான் வளர்ந்து இருக்கிறான், அறிவு வளரவில்லை, நேரில் பார்த்தால் அறைந்து விடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் நீங்க வனிதாவின் மகனா என்று கேட்ட நிலையில் அதற்கு ஸ்ரீஹரி, நான் ஆகாஷ் மகன் என்று பதில் அளித்தார்.அது பற்றி வனிதாவிடம் கேட்டபோது கோபமடைந்த வனிதா இவ்வாறு பேசி உள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.