அம்மாடியோ…. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?…. வேற லெவலில் ஹிட்டான “தி லெஜன்ட்”….!!!!

சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.

ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி  லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை விநியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்பு செழியன் இந்த படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழக முழுவதும் வெளியிட்டது. இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கமெண்ட்களை இணையத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக செய்த வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.அதாவது தி லெஜன்ட் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.