அம்மாடியோ இவ்வளவு பெரிய நகையா?…. ஆண்டாள் கோவில் கோபுரம் அப்படியே இருக்கே…. ஆல்யா மானசாவின் கலக்கல் வீடியோ….!!!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.

அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆலியா மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதாவது இவர் விஜய் டிவியிலும் சஞ்சு சன் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தனர்.இதனிடையே மீண்டும் ஆல்யா மானசா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சற்று விலகினார். சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர் அடிக்கடி தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் ஆல்யா மூன்று கிலோ எடை கொண்ட ஒரு நகையை கழுத்தில் அணியும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.