அம்மாடியோ…. ஒரு நாளைக்கு மட்டும் 45,000 செலவிடும் நயன்தாரா…. அதுவும் எதற்கு தெரியுமா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. நீண்ட வருடமாக காதலித்து வந்த இவர்கள் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தை முடித்த கையோடு நயன் மற்றும் விக்கி தம்பதியினர் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர். அங்க எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வந்தார். அதன் பிறகு சென்னை திரும்பிய இருவரும் அவரவர் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

பின்னர் சில நாட்கள் இடைவெளி விட்டு இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு இரண்டாவது ஹனிமூன் சென்று உள்ளனர். அங்கு இருவரும் ரொமான்டிக் மூடில் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஐபிஜா தீவில் சுற்றுலா சென்று உள்ளனர். அங்கு உள்ள வடமுனையில் அமைந்துள்ள பிரபல பைவ் ஸ்டார் விடுதியான சிக்ஸ் சென்சில் இருவரும் தங்கியுள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த விடுதியில் ஒருநாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளது. பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் நயன்தாரா தனது ஹனிமூனை மிக காஸ்டிலியாக கொண்டாடி வருவதை இதிலிருந்து தெரிகிறது.