தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் நுழைந்துள்ளார். அவ்வகையில் அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரேட் மேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களாக தனது திரைப்படங்கள் ஹிட் கொடுக்காததால் வருத்தத்தில் இருந்து வந்த தனுஷ் அதனை ஏறக்குறைய தற்போது சரி செய்து விட்டார்.
இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அந்த திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இந்த திரைப்படத்திற்கு தனுஷ் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.இந்நிலையில் அடுத்த படத்திற்காக தனுஷ் தனது சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார் என்று புதிய தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.தனுஷ் அடுத்து நடிக்க இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் சூட்டிங் கடந்த மாதம் தொடங்க இருந்த நிலையில் தற்போது வரை தொடங்கவில்லை.
இந்தத் திரைப்படத்திற்காக தனுஷ் தன்னுடைய சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் . அதுமட்டுமல்லாமல் தனுஷ் 30 கோடி கேட்பதால் தயாரிப்பு நிறுவனமும் அதிர்ச்சியில் உள்ளது.இதனால்தான் சூட்டிங் இன்னும் தொடங்காமல் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.