தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தினர்.
இந்நிலையில் ஹனிமூன் முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதனைப் போலவே நயன்தாராவும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அவ்வகையில் நேற்று தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாடியதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை நயன்தாராவுடன் துபாயில் கொண்டாடினார். அங்குள்ள உலகின் மிக உயரமான புருஜ் கலிபா பில்டிங்முன்பு நின்று நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.