இவருக்கா இப்படி ஒரு நிலை?…. சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடும் பழம்பெரும் தமிழ் நடிகை….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

70 மற்றும் 80களில் கவர்ச்சி உடைகள் அணிந்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஜெயக்குமாரி. முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். பழம்பெரும் நடிகையான இவருக்கு 70 வயதிற்கு மேல் ஆகின்றது. சென்னை வேளச்சேரியில் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இவரின் தந்தை உயிரிழந்து விட்டதால் ஆறு வயது சிறுமியாக இருந்தபோதே சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடிப்பதை விட கவர்ச்சி நடனத்திற்கு அதிக சம்பளம் கொடுத்ததால் நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். தனது சொந்த செலவிலேயே இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்த இவர் தனது 25 வயதில் அப்துல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் ஜெயக்குமாரி உயிருக்கு போராடும் நிலையில் இருக்கின்றார். இவர் 100க்கு 100, ரிக்ஷாகாரன்,மாணிக்கத் தொட்டில் மற்றும் பிஞ்சு மனம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பலம்பெறும் நடிகையான இவருக்கு உதவ யாரும் இல்லாமல் உயிருக்கு போராடி வரும் நிலையை அறிந்த நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் அவருக்கு உதவ முன் வர வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.