மாரடைப்பால் உயிரிழந்த பிக்பாஸ் நடிகை…. மரணத்தில் அதிரடி திருப்பங்கள்….. உடற்கூறாய்வு அறிக்கையில் பகீர் தகவல்….!!!!

ஹிந்தி பிக்பாஸ் 14வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை சோனாலி போகட். அரியானா மாநிலத்தில் பிறந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஹரியானா மாநிலம் மாதம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர் பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் வைல் கார்டு மூலம் கலந்து கொண்டார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தனது ஊழியர்களுடன் கோவாவுக்கு சென்றார்.

41 வயதாகும் இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் இறப்பதற்கு முன்பு தன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மகிழ்ச்சியாக தான் இருந்துள்ளார்.

இந்நிலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட இவரின் வழக்கில் தற்போது பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது இவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரின் சகோதரர் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சோனாலி உடலை பிரேத பரிசோதனை செய்த போது உடலில் பல இடங்களில் காயம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. Multiple blunt force injuriesஇருந்தது என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சோனாலிக்கு கோவாவில் உதவியாளர்களாக இருந்த sudhir sagwan b, Sukhwinder wari ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நடிகையின் மரணத்தில் தற்போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.