சின்னக்குயில் சித்ராவின் க்யூட் மகள் நந்தனா…. இணையத்தில் வெளியான புகைப்படம்…. மனம் உருகி வருந்தும் ரசிகர்கள்…..!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 25,000 மேற்பட்ட பாடல்களை பாடியவர் சின்னக்குயில் சித்ரா. சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பாடிவரும் இவர் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். பிரபல பாடகியான இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் இனிமையான குரலுக்கு மயங்காதவர்கள்  யாருமே கிடையாது.

இதுவரை ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் பாடிய மலர்கள் கேட்டேன், கொஞ்சி பேசிட வேணாம் உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். பல்வேறு புகழுக்குரிய இவர் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி சில வருடங்களில் இவர்களுக்கு நந்தனா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அந்த குழந்தை எதிர்பாராமல் உயிரிழந்தது. அதாவது சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சித்ரா அவரது கணவர் விஜய் சங்கர் மற்றும் மகள் நந்தனா ஆகிய மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும்போது இவ்வளவு அழகான குழந்தை இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.