BB ஜோடிகள் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?…. மிரண்டு போன ரசிகர்கள்…. பரிசுத்தொகை மட்டும் இவ்வளவா….????

விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி வார இறுதியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களது ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் உடன் நடனமாடி அசத்தி வருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியை ஆங்கர் பிரியங்கா மற்றும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் பாவாடை மற்றும் அமீர் ஜோடி. இவர்கள் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டன. கடந்த வருடம் ஒளிபரப்பான டிபி ஜோடிகள் முதல் சீசனில் ஹாரிக் மற்றும் அனிதா ஜோடி முதல் இடத்தை பிடித்தது.

அந்த சீசனில் ரம்யா கிருஷ்ணன் தலைமை தாங்கிய நிலையில் தற்போது இந்த சீசனிலும் ரம்யா கிருஷ்ணன் தலைமை தாங்கி வருகிறார். இந்த சோவில் போட்டியாளர்களாக வருபவர்கள் ஜோடிகளாக பிரிந்து நடனம் ஆட வேண்டும். இந்நிலையில் பிபி ஜோடிகள் இரண்டாவது சீசன் பைனல் நேற்று ஒளிபரப்பானது.

அதில் டைட்டில் ஜெயிக்கப் போவது அமீர் மற்றும் பாவணி ஜோடியா இல்லை சுஜாதா மட்டும் சிவகுமார் ஜோடியா என்ற நிலை வந்தது. நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் இருவரும் பிக் பாஸ் டைட்டிலில் கையை தூக்கி வெற்றியாளரை அறிவிப்பதாக சொன்னார்கள். ஆனால் இறுதியில் இருவருமே கையை தூக்கி இரண்டு ஜோடிகளும் டைட்டில் வின்னர் என்று அறிவித்து விட்டனர்.

எனவே இந்த இரண்டு ஜோடிகளுக்கும் வின்னர் என்ற கேடயம் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு பரிசு தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் அதனை இரண்டாக பிரித்து ஒரு ஜோடிக்கு இரண்டு புள்ளி ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலரும் அந்த ஜோடிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.