பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மியா இது?…. இவர்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா?…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் பாபி சிம்ஹா. இவர் ஜிகர்தண்டா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இவருக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முத்ரா என்ற மகளும் 2019 ஆம் ஆண்டு அர்ஜூன் சிம்ஹா என்ற மகனும் பிறந்தனர்.

குடும்ப வாழ்க்கையில் பிசியாக இருக்கும் பாபி சிம்ஹா தற்போது ராவண கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒன் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்திப் மாதவ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி.

அதனாலயே இந்த படம் நல்ல ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். என் நிலையில் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அந்த பூஜையில் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி தனது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.