சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை அண்மையில் திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது திருமண புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், எல்லோரும் மகாலட்சுமிபோல பெண் அமைய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் எனக்கு மகாலட்சுமியே வாழ்க்கைத் துணையாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தனியார் youtube சேனல் ஒன்று இருக்கு திருமணம் குறித்து பேட்டி அளித்திருந்தனர். அதில் ரவீந்தரின் பேச்சுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் பேசுவதற்கு பலரும் அடிமை எனவும் கூறப்பட்டது .
இந்நிலையில் அதற்கு மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு அப்படியெல்லாம் சோ எதுவும் செய்ய வேண்டாம் என முன்னதாகவே கூறியதாகவும் குறைந்தபட்சம் ஒரு வருடங்களுக்காவது இதனை தள்ளி போடலாம் என ரவீந்தரிடம் கூறியதாக அந்நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.