நீயா நானா நிகழ்ச்சியில் கண்கலங்கிய கோபிநாத்…. இப்படி ஒரு நிலையா?…. அப்படி என்ன நடந்தது தெரியுமா….????

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. அதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொல்லலாம். மொத்த நிகழ்ச்சியையும் தனது கட்டுக்குள் வைத்து பிரமிக்க வைக்கும் வகையில் நடத்துவார். நிகழ்ச்சியில் விவாதங்கள் அனைத்தையும் முடித்த பிறகு தனக்கு உரிய பாணியில் பைனல் டச் கொடுப்பார்.

இந்நிலையில் இந்த வாரம் சுவாரஸ்யமான ஒரு தலைப்புடன் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதன் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. வீடு வாடகைக்கு செல்பவர்கள், வீட்டின் உரிமையாளர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அந்த ப்ரோமோவில் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள், வாடகைக்கு செல்லும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் எழுந்தது.

அதில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வரும் நபர்களிடம் ஏகப்பட்ட கண்டிஷன் போட்டுள்ளார். அதில் ஒன்று சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாது. அப்போது கோபிநாத் நான் எழுந்து என் அப்பா முகத்தை பார்க்கணும்னா?என்று கேட்டதற்கு வீட்டு உரிமையாளர் பெண் ஆணி அடிக்கக் கூடாது என்றே பதில் கூறியுள்ளார்.அதில் இறுதியாக கோபிநாத் அப்போ நான் எங்க அப்பாவும் போட்டோவை கூட பார்க்க கூடாதா என்று குழந்தை போல ரியாக்ஷன் கொடுத்துள்ள நிலையில் அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.