“அவர் அப்படி கிடையாது”…. விஜய்யை நான் சாகும் வரை மறக்க மாட்டேன்…. மனம் உருகி பேசிய பிரபல நடிகர்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை.

இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதற்கிடையில் விஜயின் புகைப்படங்கள் இணையத்தில் வளம்  வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் குறித்த பிரபலங்களின் பேச்சுகளும், பேட்டிகளும் வைரலாகி வருகிறது.

 

இந்நிலையில் நடிகர் விஜய்யை ஸ்டண்டு கலைஞரும் நடிகருமான கிருஷ்ணன் பாராட்டி பேசியுள்ளார். பேட்டி ஒன்றில், சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்களை சில நடிகர்கள் ஒரு பொருட்டாகவே பார்க்க மாட்டார்கள். ஆனால் நடிகர் விஜய் அப்படி கிடையாது. எங்களைப் பற்றி மற்றவர்களிடம் மிகவும் பெருமையாக பேசுவார். நான் சாகும் வரை அவரை மறக்க மாட்டேன் என்று உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார். ஸ்டண்ட் கலைஞர் கிருஷ்ணன்,கலகலப்பு மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.