நான் செல்லும்போதெல்லாம்… ரஜினி வீட்டில் இதுதான் எப்போதும் நடக்குது…. பிரபல இயக்குனர் ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் இன்றளவும் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பல படங்களில் வில்லனாகவும் பல படங்களில் ஹீரோவாகவும் அசத்தியிருப்பார். நடிப்பில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார்.

இவரின் படங்கள் ஏதாவது திரையில் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது இருக்கும் இளம் நடிகைகள் அனைவரும் ரஜினியுடன் ஏதாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டுமென்று மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் எல்லா நேரமும் ஓம் என்ற மந்திரம் ஒலித்துக் கொண்டே இருப்பதாக பிரபல இயக்குனர் வசந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நான் ரஜினியின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் அவர் கண்ணாடியை பார்த்துக் கொண்டே பேசுவார்.

அவர் பேசும்போது பின்னால் ஓம் என்ற மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  ரஜினியிடம் பேசும்போது Positive Vibe இருக்கும் என்று கூறினார். சமீபத்தில் வசந்த் இயக்கிய சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.