“அப்படி ஒரு நினைப்பே எனக்கு இல்ல”…. இதை யாரும் பண்ணாதீங்க ப்ளீஸ்…. எஸ்.ஜே.சூர்யா பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை செய்து வந்த இவர் பாக்கியராஜ் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய இவர் படிப்படியாக சினிமாவின் உச்சத்தை தொட்டார். ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் வில்லனாகவும் பல்வேறு படங்களில் அசத்தியுள்ளார். அதன்படி இவர் வில்லனாக நடித்த மெர்சல்,மாநாடு மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இவருக்கு சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளியாகி வந்தாலும் 54 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.

இதனிடையே  எஸ் ஜே சூர்யாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைப்பதற்கு அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக பெண் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே விரைவில் எஸ் ஜே சூர்யா வின் திருமணம் நடக்கும் என தகவல் வெளியானது.

இதனை அறிந்த எஸ் ஜே சூர்யா, அப்படி ஒரு நினைப்பே எனக்கு இன்னும் வரவில்லை. சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு,நான் முரட்டு சிங்கிளாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்றும் இது போன்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.