திருமணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ள இதெல்லாம் தேவையா?…. ரவீந்தர் – மஹாலக்ஷ்மி செய்த செயல்…. ஷாக்கான ரசிகர்கள்…..!!!!

 

பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏனென்றால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் நடந்திருப்பது உண்மை இல்லையா அல்லது ஏதாவது சூட்டிங்கா என்று நம்புவதற்கு சில நாட்கள் ஆகிவிட்டது.

அதன் பிறகு அதிகாரபூர்வமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் குறித்து அறிவித்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.திருமணம் முடிந்த இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்த விமர்சனங்கள் என்னும் ஓயவில்லை.

இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போலவே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார். இதனிடையே பல youtube சேனல்களுக்கும் இவர்கள் ஒன்றாக பேட்டி அளித்து வருகின்றன. அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவுட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Tv updates இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytvglitz)

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவருக்கும் ரிசப்ஷன் நடந்துள்ளதா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.அதாவது மகாலட்சுமி மற்றும் ரவீந்தருக்கு பிரபல தொலைக்காட்சியில் ஸ்பெஷல் சோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் வந்தால் மகாலட்சுமி என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.. இதனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ‘திருமண முடிந்ததும் இதெல்லாம் தேவைதானா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.