அம்மாடியோ இவ்வளவா?…. டிக்கெட் விலையை திடீரென உயர்த்திய தியேட்டர்கள்….. விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…..!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.  இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் நாளை ரிலீஸ் ஆக உள்ளன.இந்த நிலையில் டிக்கெட் விலையை திரையரங்குகள் அதிகாரப்பூர்வமாகவே பல மடங்கு உயர்த்தி உள்ளது ரசிகர்கள் மத்தியில் கொடுத்துள்ளது.பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகும் போது திரையரங்குகள் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம் தான். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.