தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் ஓணம் கொண்டாடியுள்ளார். திரை பிரபலங்கள் பலரும் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடாமல் உதயநிதி நடித்து வரும் மாமன்னன் பட குழுவினரிடம் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிடையே கீர்த்தி சுரேஷ், உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விருந்து வைத்தார்.இந்த விருது குறித்து புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
