மேடம் நீங்க கிரேட்…. வேற லெவலில் பிறந்த நாளை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்…. போட்டோவை பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் பழமொழி திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் தற்போது கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.அவ்வகையில் இவர் அண்மையில் தனது 30ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில் தனது நாயுடன் அவர் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதே சமயம் அவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.