சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது…. அசால்டாக தட்டி தூக்கிய பிரபல தமிழ் நடிகை…. குவியும் பாராட்டு…..!!!!

நடிகை லட்சுமி பிரியா சந்திர மௌலி சிறந்த துணை நடிகைக்கான 68 ஆவது தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு வசந்த் எஸ் சாய் இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகிறது. இது ஒரு குறும்படங்களின் தொகுப்பு. ஜெயமோகன் எழுதிய தேவகி சித்தியின் நாட்குறிப்பு, அசோக மித்திரனின் விமோசனம் மற்றும் ஆதவன் எழுதிய ஓட்டம் ஆகிய கதைகளில் சாரமாக இது அமைந்துள்ளது.

அந்தப் படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி பார்வதி, காளீஸ்வரி, ஸ்ரீனிவாசன் மற்றும் கருணாகரன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் லட்சுமி பிரியா சந்திரமௌலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் முன்னாள் தேசிய அளவிலான கிரிக்கெட் வீராங்கனையும் தேசிய அல்டிமேட் ப்ளீஸ் பி சாம்பியனும் ஆவார்.

பல்வேறு படங்களில் துணை வேடங்களில் நடித்து வரும் இவர் தனது நடிப்பால் கவர்ந்த இன்று தேசிய விருதை வெல்லும் திறமை மிகு நடிகையாக மாறியுள்ளார். தேசிய விருது பெற்ற இவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.