பிரபல ஆன்லைன் நிறுவனம்….. Brand Ambassador-ஆக நயன்தாரா….. அதற்கு முக்கிய இதுதான் காரணம்……!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வளம் வருகிறார். பல்வேறு இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கும் நயன்தாரா நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்துள்ளன.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனிடையே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று அவர்கள் அங்கு எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர்.

பின்னர் சென்னை திரும்பிய அவர்கள் அடுத்தடுத்து தங்கள் வேலைகளைச் செய்ய தொடங்கிவிட்டனர். அவ்வகையில் நயன்தாரா தற்போது இந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள காட்பாதர் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிசியான நடிகையாக இவர் வலம் வருகிறார். இந்நிலையில் நயன்தாரா நடிப்பையும் தாண்டி பல்வேறு தொழில்களை செய்து வருகின்றார். அதாவது ஒரு சில நிறுவனங்களில் பங்குதாரராக நயன்தாரா இருக்கிறார். மேலும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கின்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் மூலம் பல்வேறு இளம் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஆன்லைன் இறைச்சி விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான ஃபிபோலோ வின் பிராண்ட் தூதுவராக நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்திற்காக நயன்தாரா நடித்துள்ள விளம்பரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

நயன்தாரா மிகப்பெரிய அசைவ விரும்பி மற்றும் கடல் உணவுகள் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த நிறுவனத்துடன் அவர் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது.இவர் நடித்துள்ள அந்த விளம்பர வீடியோ எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.