சிகிச்சை முடிந்து வாடிய முகத்துடன் இருக்கும் சமந்தா…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கலங்கிப்போன ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது சமந்தாவிற்கு மையோ சிடிஸ் என்று அரிய வகை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி திரைஉலகினர்  பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது சமந்தா என்று யசோதா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். அதற்காக அவர் தயாராக இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் சமந்தா வாடிய முகத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் கலங்கி இருக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.