“Sorry என்ன மன்னிச்சிடுங்க”….. பள்ளி விழாவில் திடீரென மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்…. என்ன நடந்தது தெரியுமா….????

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி கொண்டு இருக்கின்றன.அண்மைக்காலமாக இவர் நடித்துவரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தொடர்ந்து தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளார் சிவகார்த்திகேயன்.

இதனிடையே சினிமாவில் ஒரு பக்கம் பரபரப்பான வேலைகளில் ஈடுபட்டு பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பம் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் சந்தோஷமாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அவ்வகையில் மைதிரி எனும் நட்பு திருவிழா நிகழ்ச்சி செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை யாஷிகா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொள்ள இருவருமே வந்ததால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்குசற்று தாமதமாக வந்ததால் குறித்த நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.இருந்தாலும் வந்த உடனே மிகவும் அன்பாக மாணவர்கள் அனைவரிடமும் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார். போக்குவரத்து நெரிசலால் தாமதமாகி விட்டதாக கூறி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அதுமட்டுமல்லாமல் காலை முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மிகவும் சோர்வாக வந்தேன் .ஆனால் உங்கள் அனைவரையும் பார்த்த உடனே புது எனர்ஜி வந்துவிட்டது எனக் கூறி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் மாணவர்களை திருப்திப்படுத்தும் விதமாக மேடையில் இருந்தபடி தன் மொபைலில் செல்பி எடுத்துக் கொண்டார். அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் தங்களது அன்பைப் பொழிந்தனர். பின்னர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சிவகார்த்திகேயன் அங்கிருந்து புறப்பட்டார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் யாஷிகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.