“இப்படி ஒரு ரணகளத்திலும் குதூகலம்”…. ரகசிய திருமணம் செய்த அமலா பால்….. ஓணம் கொண்டாடிய புகைப்படங்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் விஜயை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடங்கள் மட்டுமே திருமண வாழ்க்கையை அனுபவித்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதனிடையே திருமண சர்ச்சையில் அமலாபால் மீண்டும் சிக்கியுள்ளார். அதாவது இவரின் நண்பரான பவிந்தர் சிங்குடன் சேர்ந்து திரைப்பட நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்த இருவரும் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திரைப்பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து பவிந்தர் சிங் தன்னை ஏமாற்றி விட்டதாக அமலாபால் போலீசில் புகார் அளித்த நிலையில் அவர் மீது பதினாறு பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்தர் சிங்கை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வானூர் நீதிமன்றத்தில் பவிந்தர் சிங் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது தனக்கும் அமலா பாலுக்கும் ஏற்கனவே பதிவு திருமணம் நடந்த சான்றிதழை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்தார். இருவருக்கும் பஞ்சாப் மாநிலம் புஷ்கரின் கடந்த 2018 ஆம் ஆண்டு ராதிகா பேலஸில் திருமணம் நடைபெற்றதாக ஆதாரத்துடன் அவர் மனு அளித்தார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Amala Paul இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@amalapaul)

இதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமலாபால். இந்நிலையில் அமலாபால் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.