விஜய் டிவி பிரபலமான சீரியல்களில் திடீர் மாற்றம்…. அதுவும் யார் தெரியுமா?….. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல குடும்பக் கதைகளை மையமாகக் கொண்டு ஒவ்வொரு சீரியலும் இயக்கப்பட்டு வருகிறது. அதனால் எப்போதுமே மக்களின் மத்தியில் விஜய் டிவி சீரியல்கள் நீங்காத இடம் பிடித்திருக்கும்.

ஏற்கனவே முடிவடைந்த சீரியல்களும் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகின்றன. தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சீரியல்களும் நல்ல குடும்பக் கதைகளை மையமாகக் கொண்டுள்ளன.

அவ்வகையில் விஜய் டிவியில் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்து ஓடி கொண்டிருக்கும் சீரியல்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியலுமே ஒரு கூட்டு குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குடும்பத்தை விட்டு பிரியாத அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருப்பதை ஊரே வாய் அடைத்து போகும் அளவிற்கு ஹிட் கொடுத்துள்ளது.

அதில் கதிர் மற்றும் முல்லை தற்போது வீட்டை விட்டு வெளியேற கதை களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனைப் போலவே ஒரு குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் கோபி குடும்பத்தை ஏமாற்றுவதை தெரிந்து அவர் தற்போது வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கதை களத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து கொண்டு ரசிகர்களை மிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு சீரியல்களிலும் ஒரு முக்கிய நபரின் மாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரண்டு சீரியல்களிலும் வசனம் எழுதுபவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளாராம்.அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு இனி சரவணன் என்பவரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பாரதி தம்பி என்பவரும் இனி வசனம் எழுத இருக்கிறார்கள். எனவே இனி சீரியல்களில் வசனங்களில் சில மாற்றங்கள் ஏற்படும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.