முதல் படமே சூப்பர் ஹிட்…. லெஜெண்ட் சரவணனின் 2வது படம்?…. படு குஷியில் ரசிகர்கள்….!!!

சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.

ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி  லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை விநியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்பு செழியன் இந்த படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழக முழுவதும் வெளியிட்டது. இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கமெண்ட்களை இணையத்தில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அருள் சரவணன் தான் நடிக்கப் போகும் இரண்டாவது திரைப்படம் குறித்து விரைவில் ஊடகங்களை சந்திக்க உள்ளார். இது குறித்து அவர், ஊடக நண்பர்களுக்கு வணக்கம், உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. விரைவில் சந்திக்கிறேன், சந்திக்கிறோம்”என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடித்த முதல் படமே 2500 திரையரங்குகளில் வெளியாகி ஒரே வாரத்தில் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தியதை தொடர்ந்து இரண்டாவது படத்திற்கு அவர் தயாராகியுள்ளார். இவர் மீண்டும் ஜோடி ஜெர்ரி இயக்குவார்களா? அல்லது வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் அவர் நடிப்பாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.