கணவர் உதயநிதிக்கு மார்க் போட்ட கிருத்திகா…. அதுவும் எதுக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு நல்ல பெயரை தேடித்தந்த வெற்றி படம் இது.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மாவட்ட இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கின்றார். இவரின் மனைவி தான் கிருத்திகா. இவர் படிக்கும்போதே சில ஷார்ட் பிலிம் எடுத்துள்ளார்.

அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா தம்பதியினருக்கு இன்பம் என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தனது கணவர் உதயநிதி ஸ்டாலின் குறித்து கிருத்திகா பேசி உள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ஒரு அரசியல்வாதியாக உதயநிதி ஸ்டாலினுக்கு தன்னால் 6.5/10 மதிப்பெண் தான் கொடுக்க முடியும் என்று கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், உதயநிதி அரசியலுக்கு இப்போது தான் வந்திருக்கிறார். ஐந்து ஆண்டுகளில் அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவரது மதிப்பெண் இதே 6.5-ல் தான் இருக்கிறதா இல்லை அதிகரிக்கிறதா என்று பார்ப்போம் என அவர் கூறியுள்ளார்.