ரசிகர் மனைவியின் நிறைவேற ஆசை…. நொடி பொழுதில் நிறைவேற்றிய சூர்யா…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் தற்போது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு அண்மையில் 5 தேசிய விருதுகள் கிடைத்தது. இதனிடையே சூர்யா நடிப்பையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். அதாவது அகரம் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சூர்யா  பலருக்கும் இதன் மூலம் உதவி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா மதுரை மாவட்டம் ரசிகர் மன்ற செயலாளர் மனோராஜ் என்பவரின் மனைவி தீபிகாவின் மேல்நாட்டு படிப்பு ஆசையை தனது அகரம் தொண்டு நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன தீபிகா அயர்லாந்து சென்ற மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவரின் ஆசையை சூர்யா அகரம் தொண்டு நிறுவனம் மூலமாக தற்போது நிறைவேற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அகரம் தொண்டு நிறுவனம் சார்பாக அயர்லாந்து நாட்டிற்கு மேல் படிப்பு படிக்க தீபிகா சென்றுள்ளார்.ஆனால் படப்பிடிப்பு காரணமாக அவரை வழி அனுப்ப விமான நிலையத்திற்கு சூர்யா வர முடியாததால் தொலைபேசி மூலமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

குடும்பமும் முக்கியம் அதே சமயம் தொழிலும் முக்கியம் என்றும் நன்றாக படித்து குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் சூர்யா வாழ்த்து தெரிவித்தார். இருவரும் பேசிக்கொண்ட அந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகரின் மனைவியின் ஆசையே நிறைவேற்ற சூரியா செய்த செயலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.