“இந்த நாள் எனக்கு ஸ்பெஷல் டே”…. நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்…. நடிகை பூமிகா செய்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். விஜய் நடித்த பத்ரி மற்றும் ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். டெல்லியை சேர்ந்த இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

இவர் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அடுத்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.சூர்யாவுடன் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிக அளவு கிடைக்காத நிலையில் மற்ற மொழி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி குடும்பத்தை கவனித்து வந்த இவர் மீண்டும் படங்களில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீதாராமம் திரைப்படத்தில் இவர் இடம் பெற்றுள்ளார் . தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் பூமிகா தனது 43 வது பிறந்த நாளை ஊட்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

ஊட்டியில் பல பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அவர் தனது பிறந்த நாளை அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி ஆதரவற்றோருடன் நடனமாடி கொண்டாடினார். ஏழை எளிய மக்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இந்த நாளை என்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.