பிரபல இளம் தமிழ் நடிகைக்கு டும் டும்…. திடீரென எடுத்த முடிவு…. அதுவும் யாருடன் தெரியுமா?….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் ரஜினி முருகன், தொடரி, பைரவா மற்றும் சர்கார் உள்ளிட்ட படங்கள் மூலம் பட்டி தொட்டி எல்லாம் இவர் பிரபலமானார்.

அதன் பிறகு நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படத்திற்கு இவர் தேசிய விருது பெற்றார். அண்மையில் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பெற்றோர் பார்த்த மாத்திரைக்கு இவர் சம்மதம் தெரிவித்துள்ளாராம். அரசியலில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இளைஞர்களின் கனவு கண்ணியாக விளங்கும் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்பவர் யார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.