தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு ட்ரோல் செய்தால் கூட அதில் கட்டாயம் வடிவேலு பெயர் இடம் பெற்று இருக்கும். சமூக வலைத்தளங்களின் நெட்டிசனல் பலரும் இவரை வைத்து தான் ட்ரோல் செய்கின்றனர்.

அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கும் இவரது நடிப்பில் தற்போது நாய் சேகர் returns மற்றும் மாமன்னன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் நடிகர் வடிவேலு ஹீரோவாக களமிறங்குகிறார்.பல வருடங்களுக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் இந்த இரண்டு திரைப்படங்களையும் திரையில் காண வடிவேலு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வடிவேலு குறித்து புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், வைகை புயல் அவர்களே இப்போது தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் சுருக்கமாக சொல்லவும் என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு வடிவேலு, நான் வைகை புயல் பேசுகிறேன்,வைகை இவ்வளவு நாட்களாக வறண்டு கொண்டிருக்கிறது.

இப்போது வைகை திறந்து ஓடிக் கொண்டிருக்கிறது.அதனால் மக்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறார்கள் நன்றி என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதனை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.