இவர் என்னப்பா முதல் நாளே இப்படி மாறீட்டாரு?…. பிக்பாஸ் வீட்டில் கலங்கிய ஜிபி முத்து….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மிக பிரம்மாண்டமாக ஆறாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். இதில் பத்து பெண் போட்டியாளர்கள், 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 9:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சி ஜனவரி 2023 ஆம் ஆண்டு மூன்றாவது வாரத்தில் முடிவடையும். அதில் ஆரம்பமே யூடியூப் பிரபலம் ஜி பி முத்து அவர்களின் அட்ரா சிட்டி தான்.

இனி வரும் நாட்களில் ஜிபி முத்துவால் பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதை அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இந்நிலையில் ஜி.பி முத்து பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு அவரின் குடும்பத்தினருக்காக கண்ணீர் விட்டார்.

அதாவது இதுவரை ஒருநாள் கூட தனது குடும்பத்தை பிரிந்தது இல்லை என அவர் கூறியிருந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜிபி முத்து அவரது குடும்பத்தினருக்காக கேமராவில் பேசுகிறார். அதன் பிறகு அவர் கலக்கத்துடன் பெட்டியில் படுத்திருக்கும் போது அவரை மற்றவர்கள் பயமுறுத்தி அதிர்ச்சியுடன் எழ வைக்கின்றன.பின்னர் ஜி பி முத்து மழையில் நனைந்து ஜாலியாக என்ஜாய் செய்வதும் காட்டப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் மலையில் இவர் குழந்தையாகவே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.