கொரோனாவால் உயிரிழந்த மனைவி…. திடீரென இரண்டாம் திருமணம் செய்த பிரபல தமிழ் நடிகர்?…. ரசிகர்கள் ஷாக்….!!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வளர்ந்து வரும் கலைஞர்களின் ஒருவர் தான் அருண் ராஜா காமராஜ். இவர் பாடலாசிரியர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக சினிமாவில் நுழைந்து தற்போது உயர்ந்து வருகிறார். சினிமாவில் உயர்ந்து வந்த இவருக்கு கொரோனா காலகட்டத்தில் வாழ்க்கையே சோகத்தில் மூழ்கியது.

அதாவது அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதனால் அவர் உயிரிழந்தார். அந்த தாங்க முடியாத துயரத்தில் இருந்து அருண் ராஜா தற்போது மெல்ல மெல்ல வெளி வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே கனா திரைப்படத்தை தொடர்ந்து அருண் ராஜா காமராஜர் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அதன்படி ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்த ஆர்டிகள் 15 திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை ஜி5 ஸ்டூடியோ சார்பாக போனி கபூர் தயாரித்தார். இந்த திரைப்படம் பல சமூக கருத்துக்களை முன் வைத்துள்ளது.இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அருண் ராஜா இயக்கம் படம் குறித்து ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் தற்போது இரண்டாவது திருமணம் செய்திருக்கும் தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அருண் ராஜா கடந்த 28ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் என தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் இவர்கள் திருமணம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் திருமணம் செய்து கொண்ட நபர் குறித்த எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.