நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான இவர் பெங்களூரில் பிறந்தவர். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு அவரது பெயர் லெனோ இவர் துபாய்யில் வாழ்ந்த வருகிறார். நயன்தாராவின் பெற்றோர் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர். இவரின் படம் மனஸ்ஸிநாக்கரே என்ற மலையாள படம். அதன் பின் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன

முதல் படம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான “ஐயா” படம் தான். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப செய்தார். ஐயா ஆரம்பித்து இன்று தர்பார் வரை லேடிசூப்பர்ஸ்டார் பவர் இன்னும் குறையவே இல்லை. திரையுலகிற்கு வருவதற்கு முன் நயன்தாரா கைரளி டிவியில் தொகுப்பாளராக வேலைபார்த்து வந்துள்ளார்.ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக தர்பார் படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். தற்போது கூட தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிரும் நயன்தாரா.இந்தநிலையில் தற்போது அவரது பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.கேரளா உடையில் அழகாக தேவதை போல இருக்கும் நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போயுள்ளனர்.