“இந்த ஜூலிய பார்த்தாலே எரிச்சலா வருதே”..!! அவர் வெளியிட்ட ஒரு போட்டோவை பார்த்து கடுப்பான ரசிகர்கள்..!! நீங்களே பாருங்க அந்த புகைப்படத்தை

நாம் பிரபலம் ஆக நமக்குள் ஒரு பாதியாக அமைவது தொலைக்காட்சி தான் என்று சொல்வதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி பிரபலமான ஒரு வர தான் ஜூலி.தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினா, மதுரை, கோவை என தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. போராட்டத்தில் அவர் எழுப்பிய முழக்கம் வைரலாக வீர தமிழச்சி என அவரை கொண்டாடினர் நெட்டிசன்கள். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நடிகை ஓவியாவை கார்னர் செய்ததோடு, பல பொய்களையும் கூறினார்.

இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார் ஜூலி. சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர். இந்நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்றபோது எடுத்த போட்டோவை ஜூலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 17ஆம் தேதி வெளியிட்ட அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விளாசியுள்ளனர். உங்களை தமிழ் போராளி என்று நம்பி ஏமாந்த தருணம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.