வழக்கமாக “பொண்ணை அழைச்சிட்டு வாங்க” என்று நம்ம ஊர் ஐயர்கள் சொன்னதும், கல்யாண பெண்ணை நாலைந்து பேர் புடைசூழ மேடைக்கு அழைத்து வருவது வழக்கம்.. அப்போது அந்த பெண் குனிந்த தலை நிமிராமல் மண்டபத்திற்குள் நடந்து வந்து மாப்பிள்ளை பக்கத்தில் உட்காருவார்.

மணமேடையில் உட்கார்ந்த பிறகும் கூட தலையை நிமிராமல், குனிந்தபடியே வெட்கத்துடன் உட்கார்ந்திருப்பார்.. இதைதான் இவ்வளவு காலம் நாம நேரிலும், சினிமாவிலும் பார்த்து வந்தோம்.. இப்போது இதுவும் கடந்துபோகும் என்ற ரேஞ்சுக்கு போ ய்வி ட்டது. கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் சமீபத்தில் ஒரு கல்யாணம் நடந்தது.. மணமக்கள் பெயர் வருண் – அஞ்சலி! உற்றார், உறவினர்கள், நண்பர்கள் சூழ மண்டமே பிஸியாக இருந்தது..

மாப்பிள்ளை தாலி கட்ட தயாராக மேடையில் உட்கார்ந்திருந்தார். பெண்ணை அழைத்து வருவார்கள் என்று பார்த்தால், மணமகள் அஞ்சலி டான்ஸ் ஆடியபடியே வந்தார். ரெட் கலர் புடவை & நகை சகிதம்… உடம்பை வளைத்து பம்பரமாக சுழன்று ஆடினார்.. அவருடன் தோழிகள், சிறுவர்களும் டான்ஸ் ஆடினார்கள்.. கேரளாவில் நடந்த கல்யாணம் என்றாலும், பாட்டு என்னவோ தமிழ்பாட்டுதான்.. மணமேடைக்கு வரும்போது “மம்பட்டியான்” என்ற படத்தில் இடம்பெற்றுள்ள “மலையூரு நாட்டாம மனச காட்டு பூட்டாம” என்ற பாடலுக்குதான் மணமகள் டான்ஸ் ஆடி ஒரு நடனமாடிக்கொ ண் டு என்ட்ரி கொ டுத் துள்ளார்.
Watch this https://t.co/89nRVj0HJX
— Bahadur 2.0 (@my2bit) February 4, 2020
மாப்பிள்ளைக்கு ஒரு சர்ப்ரைஸ் கொ டுக் க வேண்டும் என்பதற்காகத்தான் அஞ்சலி இப்படி ஒரு ஐடியா செய்துள்ளார். மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல.. மண்டபத்தில் உட்கார்ந்திருந்த எல்லாருக்குமே இது சர்ப்ரைஸ்தான்.. இதை அங்கிருந்தோர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிடவும், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது… இந்த மணமக்களுக்கு நெட்டிசன்கள், ட்விட்டர்வாசிகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.