காதலனுடன் உல்லாசமாக இருந்தபொது இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..! சிறிது நேரத்தில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே காதலனுடன் தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலியால் இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கஸ்தூரி(19). நர்சிங் படித்துள்ள இவர் ஆலங்குடியில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்கும் டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நாகராஜன்(22) என்பவருக்கும் இடையே மருந்து வாங்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காதலித்து வந்த இருவரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மருந்துக்கடை மூடப்பட்டதால் மாங்காடு தைலமர காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்நேரத்தில் திடீரென கஸ்தூரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது கஸ்தூரி தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். நாகராஜனும் பதறிப்போய் தண்ணீர் கொடுத்துள்ளார்.அதனை குடித்த சிறிது நேரத்திலேயே கஸ்தூரி மரணமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜன், உடனடியாக கஸ்தூரியின் உடலை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் அருகே உள்ள அம்புளி ஆற்றின் பாலத்தின் அடியில் போட்டுவிட்டு, சென்னை செல்ல முடிவெடுத்துள்ளார்.

அதன் பின்னர், இதுதொடர்பாக தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்ட நாகராஜன், அவர்கள் கூறியபடி சென்னைக்கு செல்லாமல் ஆலங்குடி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஆனால், இது தெரியாமல் பொலிசார் நாகராஜனை சென்னை சென்று தேடியுள்ளனர்.

மேலும், நாகராஜனை கைது செய்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என, கீரமங்கலம்-அறந்தாங்கி சாலையில் பனங்குளம் மற்றும் பெரியாளுர் விளக்கு ஆகிய இடங்களிலும் பேருந்து மறியல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.