கை ரேகை இல்லாத பரம்பரை..! – இதனால் பாஸ்போட் இல்லை – சிம் காட் இல்லை..! வாக்களிக்கவும் முடியாது..!

மனிதர்களின் விரலில் இருக்கும் கை ரேவை என்பது மிக முக்கியமானதொன்று. எத்தனை கோடி மக்கள் இருந்தாலும், ஒருவர் கை ரேகை மற்றவர் கைரோகையோடு கடைசி வரை ஒத்துப் போவது இல்லை. ஆனால் பங்களாதேஷில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் உள்ள எவருக்கும் கை ரேகை இல்லை.

இது ஒரு ஜெனடிக் குறை பாடு. கோடியில் ஒருவருக்கு தான் வரும். ஆனால் இந்த குடும்பத்தில் பிறக்கும் எவருக்கு கை ரேகை இருப்பது இல்லை. இதனால் இவர்கள் வாக்கு போட முடியாது என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் சொல்லப் போனால் பாஸ்போட் கூட இவர்களிடம் கிடையாது. சரியான ஐ.டி கார்ட் ஒன்று இல்லாத காரணத்தால் அவர்களுக்கு சிம் காட் கொடுக்க கூட எந்த ஒரு மோபைல் நிறுவனமும் முன்வரவில்லையாம். இப்படி ஒரு கஷ்டத்தில் இந்த குடும்பம் இருக்கிறது.