கொரோனாவை விரட்ட பெண்களை ஆடையின்றி ஊர்வலம் வர சொல்லும் நாடு! இப்படியொரு விசித்திரமா? முழு தகவல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான Ivory Coast-ல் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற பெண்களை ஆடையின்றி ஊர்வலம் வர செய்து பேயோட்டும் நிகழ்வை நடத்த நாட்டு மன்னர் உத்தரவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை மன்னர் Amon N’Douffou V-ன் உதவியாளர் வெளியிட்டுள்ளார்.

Ivory நாட்டில் 1000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் தான் மன்னர் இந்த முடிவை எடுத்து விரைவில் அறிவிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. கடந்த வாரம் கூட மன்னர் கொரோனாவை விரட்ட பேயோட்டுதல் விழாவை நடத்தியுள்ளார். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் மட்டுமே கலந்து கொண்டனர், ஏனெனில் கொரோனா பீதியில் பலர் பங்கேற்கவில்லை.

அப்போது, நான் கடவுளிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், மக்களைப் இந்த வைரஸிடம் இருந்து பாதுகாக்கவும், உலகிலிருந்து வைரஸ் ஒழிய வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்று மன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் மூலம் பேசியுள்ளார். ஆனால் இதை அவர் பொதுமக்களை முன்னர் நேரடியாக உரையாற்றவில்லை. இதையடுத்தே பெண்களை ஆடையின்றி ஊர்வலம் வர செய்து சாங்கியத்தை நடத்த மன்னர் விரும்புவதாக தெரிகிறது.

மக்களை பாதுகாக்க இது நடத்தப்படும் எனவும், அதே சமயம் ரகசியாகவே இது செயல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. ஊர்வலம் நடக்கும் முந்தைய நாள் வரை இது யாருக்கும் தெரியப்படுத்தப்பட மாட்டாது. மேலும் இந்த ஊர்வலம் சமயத்தில் ஆண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும் எனவும் தெரியவந்துள்ளது.