சீனாவில் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். தற்போது இதன் தாக்கம் இந்தியாவில் சற்று அதிகரித்து வருகின்றனது. சமீபத்தில் ஜோதிட சிறுவன் மே மாதம் கடைசியில் தான் இந்த நோய் முடிவுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், இத்தருணத்தில் மிகவும் அதிகமாகவே பரவி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் இளம்பெண் ஒருவர் அருள்வாக்கு கூறியுள்ளதாக காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இன்னும் 7 மாதத்திற்கு மக்கள் அல்லல் பட வேண்டும் இந்த நோயினால் என்று கூறி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளார். இன்னும் பல உயிர்களை பலி வாங்கும் இந்த கொள்ளை நோயினை நாங்கள் உருவாக்கினோம் என்றும் கலியுகத்தின் ஆரம்பமே பாவ செயல்கள் அதிகமாகிவிட்டதால் மக்கள் இந்த நோயினால் 7 மாதத்திற்கு அல்லல் படுவார்கள் அதற்கு பின்பே மருந்தும் வரும் என்று கூறியுள்ளார்.