சரியாக பேச முடியாது, கேட்க முடியாது..!! கணவரின் துணையோடு 1 கோடி ருபாய் பரிசை வென்ற மாற்றுத்திறனாளி பெண்..!! குவியும் பாராட்டுக்கள்..!!

சமீபகாலங்களாக  பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சியில் நடிக்கும் பல பேர் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். சினிமாவில் எந்த அளவிற்கு முக்கிய துவம் வாய்ந்ததோ. அதே அளவிற்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் கொடுக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும் அதே சமயத்தில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் வித்தியாச வித்தியாசமாக தொடர்களையும் நிகழ்ச்சியையும் மாற்றி மாற்றி ஒளிபரப்புகின்றன.இதில் சில நிகழ்ச்சிகள் ஹிட்டடிக்கின்றன.சில நிகழ்ச்சிகள் தோல்வியடைகின்றன.

இன்னும் சில சேனல்கள் மற்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை அப்படியே உல்டா செய்து புது பெயரில் ஒளிபரப்படுகின்றன. அந்தவகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகாவால் தொகுத்து வழங்கப்பட்டு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி கோடீஸ்வரி.விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி போலவே ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பிரத்யேகமாக பெண்களுக்காக மட்டும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மூவாயிரம் பெண்களில் இருந்து 120 பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.இதனை பெண்கள் தேர்வாகி இருந்தாலும் இதுவரை யாரும் மொத்த கேள்விகளுக்கும் பதில் சொல்லி 1 கோடி பரிசுத்தொகையை வென்றதில்லை.

ஆனால் முதல்முறையாக மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான கௌசல்யா அந்த சாதனையை முறியடித்துள்ளார்.ஆரம்பம் முதலே சாமர்த்தியமாக விளையாடிய கௌசல்யா 15 கேள்விக்கும் சரியான பதிலை கூறி ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்