சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்தவர். அது மட்டுமின்றி இளம் நடிகர்கள் தனுஷ், சிம்புவுடனும் நடித்து அசத்தினார், தற்போது இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டு தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகின்றார். இவர் புதுப்பேட்டை படத்தில் நடித்த போது, ஒரு காட்சியில் இவரை நடிகர் பாலாசிங் எட்டி உதைப்பது போல் இருந்ததாம். அந்த காட்சி குறித்து பாலாசிங் கூறுகையில் ‘நான் செல்வா படத்தில் அதிக டேக் வாங்கியது அது தான், வயிற்றில் மிதிக்க வேண்டும்.
அதனால், ஒவ்வொரு முறையும் கவனமாக இருக்க, ஒரு கட்டத்தில் டேக் அதிகமாக, உண்மையாகவே எட்டி மிதித்து விட்டேன், அது எனக்கு மிகவும் தர்மசங்கடமாகியது’ என பாலாசிங் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.