கம்போடியா நாட்டில் சியம் ரியாப் என்ற பகுதியில் மின் மின் (35 வயது) என்பவர் முதலை பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், கடந்த ஞாயிறன்று முதலை பண்ணையில் வேலை செய்து வந்தார். பண்ணையை ஒட்டியே இவரது வீடு உள்ளது. அங்கு, அவரது மனைவியும், 2 வயது மகள் மற்றும் புதியதாக பிறந்த குழந்தை இருந்துள்ளனர். ஆனால், மின் மின் பண்ணைக்குள் சென்றுவிட்ட பின், அவரது 2 வயது மகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், வீட்டிற்கு திரும்பி வந்த மின் மின், தனது மனைவியுடன் சேர்ந்து மூத்த மகளை பண்ணை முழுக்க தேடியுள்ளனர். ஆனால் ,ஓரிடத்தில் சிறுமியின் மண்டையோடு மட்டும் கிடந்துள்ளது. இதைப் பார்த்ததும், அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, விளையாடி கொண்டிருந்த சிறுமி, பண்ணைக்கும், வீட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியில் சிக்கி, நீர்ப்பகுதியில் விழுந்துவிட்டதாக, தெரிகிறது. உடனே அந்த சிறுமியை முதலைகள் சூழ்ந்து கடித்து தின்றுவிட்டன. சிறுமியின் மண்டையோடு மட்டும் எஞ்சியிருப்பதை பார்த்து, குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துள்ள