தூய தமிழில் என்ன அருமையா பேசறாங்க பாருங்க இந்த பள்ளி மாணவி , இவரது பேச்சை கேட்க யாருக்கு தான் பிடிக்காது .?

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று ,. இதனை சரியாக பயன்படுத்தினால் முன்னேறி விடலாம் , தவறாக மாற்றினால் பின்தங்கிடுவோம் என்று பல ஞானிகள் கூறி நாம் கேட்டிருப்போம் , அப்பொழுதே நன்றாக கணித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ,

“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு ” என்பது வள்ளுவன் வாக்கு , இதற்கான அர்த்தம் என்னவென்றால் தீயால் சுட்ட காயமானது கூட பல ஆண்டுகள் ஆனாலும் ஆறிவிடும் ஆனால் ஒருவர் மற்றொருவரை பற்றி பேசும் பேச்சானது எப்பொழுதுமே மறக்காத ஒன்றாகும் ,

இதன் உவமையை கொண்டே பல்வேறு மேடை பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றது , சில நாட்களுக்கு முன்னர் பள்ளி மாணவி ஒருவர் தாம் பயிலும் பள்ளி வகுப்பறையில் பிரமாதமாக பேசி உடன் இருந்த நண்பர்களை திகைக்கவைத்தார் , இந்த காணொளி பதிவானது இணையவாசிகளை வாயடைத்து போக வைத்துள்ளது .,