நடுராத்திரி, நடுரோட்டில் அந்த கோலத்தில் நின்றேன்..!! அதன் பின் என்ன நடந்தது தெரியுமா..?? பிரபல பாடகியின் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம்..

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான திருட திருடி படத்தில் மனமத ராசா பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பின்னணி பாடகி மாலதி லக்ஷ்மன். தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.கச்சேரி என்றால் அப்போது கொஞ்சம், கலர்புல்லாக தானே இருப்போம், அதன் படி உடை அணிந்து கச்சேரியில் பாடினேன். இரவு 11 மணிக்கு கச்சேரி முடிந்தவுடன், சென்னையில் ரெக்கார்டிங்கிற்காக காரில் சென்றோம். மிகவும் தூரம் என்பதால், காரில் இரண்டு டிரைவர்கள் இருந்தனர். ஒருவர் மாற்றி, ஒருவர் ஓட்டிக் கொள்ளும் படி இருந்தது, இரவு நேரம், ரெக்கார்டிங்கிற்கு வேறு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும், ஆடை மாற்றினால் நேரம் ஆகிவிடும் என்று, அந்த ஆடையோடு அப்படியே காரில் சென்றேன்.ஒரு இடத்தில் டிரைவர் மாற்றிவிடுவதற்காக இறங்கினார்.

அப்போது நான் கழிப்பறைக்கு செல்வதற்காக இறங்கினேன், அதே நேரத்தில் மற்றொரு டிரைவரும் இறங்கி கதவை முடியதால், என்னுடைய கதவின் சத்தம் சரியாக டிரைவருக்கு கேட்கவில்லை. இதனால் மாறிக் கொண்ட இருவரும், அதன் பின் காரில் என்னை பார்க்காமல், காரை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் அந்த நடு இரவில் காரை பிடிப்பதற்காக துரத்தினேன், ஆனால் சீக்கிரமாக செல்ல வேண்டும் என்று கூறியதால், அவர்கள் காரை வேகமாக  சென்றனர். காரை என்னால் பிடிக்க முடியவில்லை, ஒரு கலர்புல்லான உடை நான் நின்ற இடத்தில் இரு பக்கமும் ஒரு காடு போன்று இருந்தது.

அப்போது லாரி ஒன்று வந்தது. உடனே நான் லாரியை மறித்து நடந்தவற்றை அவர்களிடம் கூறினேன். உடனே அவர்கள் அப்படியா மேடம், வாங்க கொஞ்ச தூரம் சென்றால் ஒரு டெலிபோன் பூத் இருக்கும், அங்கு சென்று போன் செய்யலாம் என்று அழைத்து சென்றனர். நான் இல்லை என்பதை உணர்ந்து, உடனடியாக போனை எடுத்து பேசினார். நான் இருக்கும் இடத்தை கூறினேன், அவர்கள் உடனடியாக காரில் வந்து, அய்யோ என்னை மன்னித்துவிடுங்கம்மா என்று கூறினார்கள், நான் அட விடுங்கள் அண்ணே என்று கூறி, அந்த லாரி டிரைவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு திரும்பினேன், இந்த சம்பவத்தை வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.