பிரபல தமிழ் நடிகையை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நபருக்கு நேர்ந்த பரிதாபம்! உண்மையில் நடந்தது என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகளவில் நடைபெற்ற போராட்டங்களில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடக்கூடாது என்று குரல பல தரப்பு மக்களிடம் ஓங்கி ஒலித்தது. அப்போது ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மூலம் கவனம் பெற்ற நபர் நிலானி.சின்னத்திரை நடிகையான இவர், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் ஒரு தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் சினிமா உதவி இயக்குனர் லலித்குமார் படத்தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்துள்ளார். இந்நிலையில் நடிகையான நிலானி சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தொந்தரவு செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனால் விரக்தியடைந்த லலித்குமார் கடந்த ஞாயிற்றுக் கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பொலிசார் அவரின் போன் மற்றும் ஆண்நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.லலித்குமார் அலுவலகத்தில் நிலானி நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டுச் சென்றுள்ளார். அப்போது நிலானிக்கும், லலித்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலானியின் அழகில் மயங்கிய லலித்குமார் அவரை காதலித்துள்ளார் மேலும் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.இப்படி இருவரும் மகிழ்ச்சியாக இருந்த போது, லலித்குமாருக்கு வேலை பறிபோனதால், அவரின் பணவரவு குறைந்துள்ளது. இதனால் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது.பணம் இல்லாததால், நிலானிக்கும், லலித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.

 

இந்நிலையில்  நிலானி மதுரவாயில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அப்போது பொலிசார் சமரசமாக பேசி அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் நிலானிக்கு புதிய ஆண் நண்பரின் பழக்கமும் கிடைத்துள்ளது இதனால் மீண்டும் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நிலானியை மறக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.இருப்பினும் பொலிசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.