பிரபல நடிகையின் கையில் இப்படியொரு டாட்டூவா?… நடிக்கும் போது மட்டும் மறைப்பது ஏன்?

தொகுப்பாளினியாக இருந்த பலரும் தற்போது நடிகர், நடிகைகளாக வலம்வரத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த சித்ரா தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வருகின்றார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டார் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றார். கதிர் என்ற கதாபாத்திரத்துடன் முல்லையின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி வேற லெவல் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வரும் சித்ரா சீரியல்களில் நடிக்கும் பொழுது மட்டும் தனது கையில் இருக்கும் டாட்டூவை மறைத்துக்கொள்வாராம்.

அப்படியென்ன டாட்டூ என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில், தனது கையில் மைக் வடிவத்தில் டாட்டூ ஒன்றினைக் குத்தியுள்ளார். நடிப்பதற்கு முன்பு ஆர் ஜேவாகவும், வி ஜேவாகவும் இருந்துவந்ததால் தொழில் மீது இருக்கும் பக்தியினால் இவ்வாறு டாட்டூ குத்தியுள்ளாராம். ஆனால் நடிக்கும் பொழுது மட்டும் இந்த டாட்டூவை மேக்கப் செய்து மறைத்துவிடுகிறாராம்.